1 17 scaled
உலகம்செய்திகள்

எனது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என்ற இத்தாலியர் கோமாவில் மரணம்

Share

எனது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என்ற இத்தாலியர் கோமாவில் மரணம்

இத்தாலியின் மிகவும் தேடப்பட்ட மாஃபியா தலைவன் கைதான நிலையில், தற்போது மருத்துவமனையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியின் மிகவும் கொடூரமான Cosa Nostra என்ற மாஃபியா குழுவுக்கு தலைவனான Matteo Messina Denaro என்பவரே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகள் பொலிசாருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், கடந்த ஜனவரி மாதம் பொலிசாரிடம் சிக்கினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டைருந்த இவர், கடந்த மாதம் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இத்தாலியின் பல எண்ணிக்கையிலான கொலைகளுக்கு முதன்மை காரணம் டெனாரோ என்பவர் என்றே நம்பப்படுகிறது.

2002ல் இவர் மீதான கொலை வழக்குகள் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமலே ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார். தமது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என முன்னர் ஒருமுறை இவர் குறிப்பிட்டது, இத்தாலியில் பரவலாக பேசப்பட்டது.

1993ல் இருந்தே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், அதன் பின்னர் தமது சகாக்களால் மாஃபியா தொழிலை முன்னெடுத்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை கோமா நிலைக்கு சென்றதை அடுத்து தற்போது மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தீவிரமான சிகிச்சை ஏதும் முன்னெடுக்க வேண்டாம் என டெனாரோ கோரிக்கை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...