rtjy 231 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இரத்தக்களரியை ஏற்படுத்தலாம்! கடும் தொனியில் மிரட்டல்

Share

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இரத்தக்களரியை ஏற்படுத்தலாம்! கடும் தொனியில் மிரட்டல்

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் மீண்டும் இனமோதலுக்கு வழி வகுத்து இரத்தக்களரியை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கடற்படை தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவேந்தும் இப்படியான நிகழ்வுகளை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

வடக்கில் திலீபனை நினைவேந்தும் நிகழ்வுகளுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மாவட்ட நீதி மன்றங்களில் பொலிஸார் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

எனினும் வடக்கில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளன. வடக்கு நீதிமன்றங்கள் இப்படியான கட்டளைகளைத்தான் வழங்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

எனினும் பொலிஸார் தமது கடமைகளை உரிய வகையில் செய்து வருகின்றனர். வடக்கிலும்,கிழக்கிலும் பொலிஸாருக்குச் சவால் விடும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். அவர்களைத் திருத்தவே முடியாது.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் மீண்டும் இன மோதலுக்கு வழிவகுத்து இரத்தக்களரியை ஏற்ப டுத்தும் என்பதைத் தமிழ் அரசியல்வாதிகளிடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவேந்தும் இப்படியான நிகழ்வுகளை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். எனவே இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் , நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் சுயாதீன விசாரணைகளை நடத்தி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் தேவையேற்படின் சர்வதேச விசாரணையை நாட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...