சினிமாசெய்திகள்

ஜேர்மானியரின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தை மரணம்

Share

ஜேர்மானியரின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தை மரணம்

ஜேர்மானியர் ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருந்த 20 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மானியர் ஒருவருடைய காதலியின் குழந்தை அவரது கட்டுப்பாட்டிலிருந்த நிலையில் உயிரிழந்துள்ளது. பல முறை அவர் அந்த 20 மாதக் குழந்தையைத் தாக்கியதும், பலமாக குலுக்கியதும் தெரியவந்துள்ளது.

மூளையில் காயம் ஏற்பட்டு அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டது. உடற்கூறாய்வில், அந்தக் குழந்தையின் நெஞ்சுப் பகுதியின் பின்னாலுள்ள முகுகெலும்பு உடைந்திருந்ததும், கடுமையான தாக்குதல் காரணமாக அந்தக் குழந்தை உயிரிழந்திருந்ததும் தெரியவந்தது.

அந்த 28 வயது இளைஞர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த நிலையில், Winterthur மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள், 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், அவரது தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவரை நாடுகடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...