rtjy 206 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பிள்ளையானின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்

Share

பிள்ளையானின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்

கடத்தல் மற்றும் கொலைகள் மூலம் இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி காரியாலயத்தில் நேற்று முன்தினம் (20.09.2023) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனல் 4 ஆவணப்படம் உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை மிக தெளிவாக அடையாளப்படுத்தியதுடன் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த சூத்திரதாரிகள் இந்த மண்ணிலே செய்த அட்டூழியங்கள் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி எனக்கூறி மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ற பெயரில் புலிகள் என்ற நாமத்தை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்துவந்த ஒரு சூத்திரதாரியே பிள்ளையான்.

அவருடன் நெருக்கமாக இருந்த ஆசாத் மௌலானா மூலம் அந்த உண்மைகளை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து மக்கள் விழிப்படைந்துள்ளனர்.

எனவே இனியும் மக்கள் ஏமாறக்கூடாது. தமிழ் மக்கள் போராடிவந்த ஆயுத போராட்டத்தை கடந்த 13 வருடங்களாக இப்படிப்பட்டவர்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து காட்டிகொடுத்து தமிழ் மக்கள் தாய், தந்தை அற்ற அனாதைகளாக காணப்படுவதற்கு காரணமான பிள்ளையான் போன்ற நபர்கள் இன்று ஆதாரங்களுடன் பிடிபட்டுள்ளனர்.

பிள்ளையான் விடுதலைப்புலிகளில் இருந்து பிரிவதற்கு முன்னர் அவரின் குடும்ப பின்னனி அந்த பகுதி மக்களுக்கு தெரியும்.அவருக்கு எந்தவிதமான சொத்துக்களும் இல்லை. ஆனால் அண்மையிலே வீடியோ மூலம் வாழைச்சேனையில் பரம்பரைக் காணி இருப்பதாகத்தெரிவித்துள்ளார்.

இதனை பார்க்கும்போது இவர் ஊழல், இலஞ்சம், கொலைகள், கொள்ளைகள், கடத்தல் போன்ற செயல்கள் மூலம் கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்திருக்கின்றார் என அறிய முடிகின்றது.

எனவே இவ்வாறாக சேகரித்த அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு இந்த மாவட்டத்திலே இவரால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமென நீதி பிறப்பியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...

Untitled
செய்திகள்இந்தியா

இந்தியாவின் மாபெரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்: 30 இலட்சம் அதிகாரிகள் களமிறக்கம்!

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், ஒவ்வொரு தனிநபரையும் கணக்கெடுக்கும் பத்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும்...