rtjy 201 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலைய உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழப்பு

Share

கட்டுநாயக்க விமான நிலைய உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழந்துள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் முல்லேரிய வைத்தியசாலையின் இரண்டாம் நிலை உயிரியல் ஆய்வு கூடங்கள் தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் கேரளாவில் நிபா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இலங்கையிலும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழந்துள்ளதாக தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவளை, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, நாடு மூடப்படும் அபாயம் இல்லை எனவும், மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

1999ஆம் ஆண்டு மலேசியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ், சமீப காலமாக இந்தியாவில் பரவி வருகின்றது. அதில் 6 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...