tamilni 278 scaled
இலங்கைசெய்திகள்

அதிரடியாக தோஹாவுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்

Share

அதிரடியாக தோஹாவுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்

இலங்கை கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட மலேசியர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர்.

மலேசிய நாட்டவரான 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு அதே விமானத்தில் தோஹாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அபுதாபியில் திருகோணமலை பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு தரகர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் விமான அனுமதி மற்றும் விசாவை வழங்கியுள்ளார்.

அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கை இளைஞர் அன்றைய தினம் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்ற நிலையில்,பின்னர், இலங்கை இளைஞரிடமிருந்து இலங்கை கடவுச்சீட்டை குறித்த மலேசியர் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இலங்கை கொழும்பில் உள்ள மலேசிய தூதரகத்தினை தொடர்புகொண்டு தனது கடவுச்சீட்டு தொலைந்துவிட்டதாக அறிவித்து, புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 09/19 மாலை தோஹாவிலிருந்து கட்டுநாயக்கவிற்கு QRR-யில் விமானம் மூலம் வருகை தந்துள்ளார்.

நாட்டிற்குள் நுழைவதற்குத் தேவையான அனுமதிப் பணிகளை மேற்கொண்ட போது அவரது மொழி உச்சரிப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

இதற்கமைய, மலேசியரை கைது செய்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள், அவர் வந்த அதே கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் மீண்டும் தோஹாவுக்கு நாடு கடத்தப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...