tamilni 264 scaled
இலங்கைசெய்திகள்

கோழைத்தனமாக அறிக்கை விடுத்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர்!

Share

கோழைத்தனமாக அறிக்கை விடுத்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர்!

அகிம்சைவாதியான தியாகி திலீபனை நினைவுகூருவது சட்டவிரோதம் என்று கோழைத்தனமாக அறிக்கை விடுத்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர், அந்த அறிவிப்பை உடன் மீளப்பெற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

அகிம்சை வழியில் போராடி உயிர்த்தியாகம் செய்த திலீபனை நினைவுகூர்ந்து வாகனப்பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது திருகோணமலையில் வைத்து மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதைத் தடுக்காமல் பொலிஸார் செயற்படும் விதத்தையும் காணொளிகளில் காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில் அரசின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய கிழக்கு மாகாண ஆளுநர், செல்வராசா கஜேந்திரன் எம்.பியின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது எனக் கோழைத்தனமாக அறிக்கை விட்டுள்ளார்.

ஓர் அகிம்சைவாதியை நினைவுகூர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், வழிமறிக்கப்பட்டு மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குக் கண்டனம் தெரிவிக்க அவருக்கு உரிமையில்லை, மாறாக நினைவேந்தலைச் சட்டவிரோதம் எனக் கூறி கோழைத்தனமாக அவர் அறிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு ஆளுநரின் செயலைக் கண்டிக்கின்றோம். அந்தக் கூற்றை அவர் உடன் மீளப்பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...