5 19 scaled
உலகம்செய்திகள்

காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்

Share

காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்

தமிழகத்தின் பொள்ளாச்சியில் காதல் மனைவியை 17 முறை கத்தியால் குத்திக்கொன்ற கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி புதுகாலனியை சேர்ந்தவர் டேவிட்(வயது 34), இவருக்கும் கற்பகம் என்ற பெண்ணுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிகளுக்கு தற்போது 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண்குழந்தையும் இருக்கிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் சில காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், டேவிட் தன் மனைவி கற்பகத்தை சந்தித்து மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என அழைத்திருக்கிறார்.

இதற்கு கற்பகம் மறுப்பு தெரிவிக்க இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த டேவிட் நேற்று முன்தினம் கற்பகத்தின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் வைத்து கற்பகத்தை மீண்டும்வாழ வருமாறு அழைத்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்ததால் டேவிட் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு கற்பகத்தை சரமாரியாக 17 தடவை குத்திக்கொலை செய்திருக்கிறார்.

இந்த தகவலையறிந்த பொலிஸார் டேவிட்டை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Share
தொடர்புடையது
image 1000x630 3 1
உலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் இன்று (அக்டோபர் 17, 2025) 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச...

image 1000x630 2
செய்திகள்உலகம்

வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கி – டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இன்று

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17)...

image 1000x630 1 1
செய்திகள்இலங்கை

பெரும்பாலான பகுதிகளில் மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இன்றையதினம் (அக்டோபர் 17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு...