rtjy 118 scaled
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சர்வதேச விசாரணை : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சர்வதேச விசாரணை : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் நியமிக்கப்படவுள்ளன என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் ஏமாற்று நாடகமே அரங்கேற்றப்படும். சர்வதேச விசாரணையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி மிகவும் முக்கிய ஆவணம்.

சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும். அதைவிடுத்து இங்கு நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் நாம் அடியோடு நிராகரிக்கின்றோம். குற்றவாளிகள் உள்ள இடத்தில் நீதியை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. எனவே, சர்வதேச விசாரணையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும்” என்றார்.

Share
தொடர்புடையது
01 10
செய்திகள்உலகம்

ஈரான் போர்: அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’...

30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...