rf scaled
உலகம்செய்திகள்

8 வருடங்களுக்கு பிறகு போய்கோ கோபுரங்களை ரஷ்யாவிடம் இருந்து மீட்ட உக்ரைன்

Share

8 வருடங்களுக்கு பிறகு போய்கோ கோபுரங்களை ரஷ்யாவிடம் இருந்து மீட்ட உக்ரைன்

கருங்கடலில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த போய்கோ கோபுரங்களை உக்ரைன் தற்போது தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

கிட்டத்தட்ட 19 மாதங்களாக உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில், ஆரம்ப கட்டங்களில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அத்துடன் உக்ரைன் தென்கிழக்கு பகுதியின் 4 முக்கிய பிராந்தியங்களை தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாகவும் ரஷ்யா அறிவித்தது.

இருப்பினும் ரஷ்ய படை கட்டுப்பாட்டில் வைத்து இருந்த பல பகுதிகளை உக்ரைனிய படைகள் தற்போது எதிர் தாக்குதல் நடத்தி மீண்டும் கைப்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கருங்கடலில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த போய்கோ கோபுரங்களை(Boiko towers) தற்போது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உக்ரைன் கொண்டுவந்துள்ளது.

இந்த போய்கோ கோபுரங்கள் கடந்த 2015ம் ஆண்டு ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. அத்துடன் இதனை ரஷ்யா அவர்களது ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வந்தனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....