rtjy 109 scaled
இலங்கைசெய்திகள்

ஐரோப்பா செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

Share

ஐரோப்பா செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

ஐரோப்பா உட்பட மேற்குலக நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பாரியளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்புவதாக கூறி அதிகளவிலான இளைஞர் யுவதிகள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இதனால் முறையான வழிமுறைகளை மாத்திரம் பயன்படுத்தி நம்பகத்தன்மையுடன் கூடிய கல்வி நிலையங்கள், முகவர் நிலையங்கள் என்பனவற்றின் ஊடாக பயணங்களை மேற்கொள்ளுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்கள்.

அண்மைக்காலமாக வெளிநாடு செல்வதற்காக இலங்கையர்கள் பெருமளவு பணத்தை இழந்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதேவேளை, ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் முகவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...