rtjy 110 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அமைச்சரவையில் சிறிய மாற்றம்

Share

இலங்கை அமைச்சரவையில் சிறிய மாற்றம்

இலங்கையின் அமைச்சரவையில் சிறிய மாற்றம் ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாக அமைச்சர்கள் சிலருக்கும் ராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கும் இடையில் இடம்பெற்ற திணைக்களப் பொறுப்பு இழுபறி மற்றும் வசதிகள் குறித்து பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இந்த மாற்றம் நிகழவுள்ளதாக அரசாங்க தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக இந்த பிரச்சினைகள் குறித்து கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமைச்சுக்களின் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் அமைச்சரவை அலுவலகம் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் மே 17 முதல் ஆகஸ்ட் 26 வரை பெரிய அளவிலான தரவுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அலுவலகம் உட்பட, மின்னஞ்சல் டொமைனைப் பயன்படுத்தும் அனைத்து அரசாங்க அலுவலகங்களும், பாரிய வைரஸ் தாக்குதலுக்குப் பின்னர், 2023 மே 17 முதல் ஆகஸ்ட் 26 வரையிலான தரவுகளை இழந்துள்ளதாக, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ஐசிடீஏ உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதல்; சுமார் 5,000 மின்னஞ்சல் முகவரிகளை பாதித்திருக்கலாம் என்று ஐஊவுயு நிறுவன மேலாளர் மகேஸ் பெரேரா கூறியுள்ளார்.

சுமார் இரண்டரை மாத மதிப்புள்ள தரவுகளுக்கு ஓஃப்லைன் காப்புப்பிரதி )எதுவும் இல்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டதுடன், ஒன்லைன் காப்பு பிரதிகளும் சிதைந்து விட்டன என்று அவர் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தொலைந்து போன தரவுகளை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறது என்று பெரேரா கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...