rtjy 89 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் திரிபோலி கொலை குழுவால் நாங்களும் கொல்லப்படுவோமா.. சாணக்கியன்

Share

கோட்டாபயவின் திரிபோலி கொலை குழுவால் நாங்களும் கொல்லப்படுவோமா.. சாணக்கியன்

கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து இயங்கிய திரிபோலி ப்ரோட்டன் குழுவை பாவித்து எங்களையும் கொலை செய்வார்களா என்ற பயம் உருவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மட்டக்களப் மாவட்டத்தில் மக்களுக்காகவும், உரிமைக்காகவும் பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்களான சசி புண்ணியமூர்த்தி, நிலாந்தன், கிருஷ்ணா போன்றவர்கள் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தங்களது ஊடக கடமையை செய்து வருகின்றனர்.

இன்றும் அந்த ஊடகவியலாளர்கள் இந்தப் பிள்ளையான் போன்றவர்களால் அச்சுறுத்தப்பட்டு வருவதுடன் அவர்களுடைய உயிர்களுக்கு ஆபத்தும், உத்தரவாதம் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இந்த நிலை என்றால் எங்களுக்கும் பயமாக இருக்கின்றது. காரணம் நானும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். கோட்டாபய ராஜபக்சவுடன் சேர்ந்து இயங்கிய திரிபோலி ப்ரோட்டன் குழுவை பாவித்து எங்களையும் கொலை செய்வார்களா என்ற அச்சம் எமக்கு உண்டு என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...