tamilni 95 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு அழுத்தம்!! ஐ.நா கோரிக்கை

Share

இலங்கைக்கு அழுத்தம்!! ஐ.நா கோரிக்கை

பொறுப்புக்கூறல் தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூறல் மிகவும் இன்றியமையாதது எனவும் தெரிவித்துள்ளது.

போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் வேதனையுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

போர் குற்றச்செயல்கள் அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலான பொறுப்புகூறல் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முன்னோக்கி நகர வேண்டுமாயின் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும்,பொறுப்புகூறல் விவகாரத்தில் இலங்கை தொடர்ந்தும் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிதல் மட்டும் போதுமானதல்ல எனவும் பொறுப்புகூறல் மற்றும் மாற்றங்களை நடைமுறைபடுத்தக்கூடிய அரசியல் விருப்பம் என்பனவும் மிகவும் அத்தியாவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் சர்வதேச உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஏற்கனவே அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு சர்வதேச சமூகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அதேவேளை, குற்றசெயல்களுக்கு பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை, நல்லாட்சி ஆகிய விடயங்களில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதனை இலங்கைக்கு வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நிறுவன ரீதியான மாற்றங்களை, மறுசீரமைப்புகளை செய்து குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூறல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...