rtjy 61 scaled
இலங்கைசெய்திகள்

பிள்ளையானுக்கு உதவிய சிறையதிகாரி .. சனல் 4இல் வெளியான ஆதாரம்

Share

பிள்ளையானுக்கு உதவிய சிறையதிகாரி .. சனல் 4இல் வெளியான ஆதாரம்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் உதவியதாக அவரது முன்னாள் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையானுக்கு விசேட பிரபுக்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சனல் 4 ஊடகத்திற்கு வழங்கிய தகவல்களில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலையில் தம்மை சந்திக்குமாறு பிள்ளையான் தொலைபேசியில் அறிவித்தார். பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் நான் சில கடும்போக்குவாதிகளை சந்தித்தேன்.

இவர்களுக்கு உலகத்தில் நாட்டம் கிடையாது மரணத்தை தழுவ தயங்காதவர்கள் எனவும் பிள்ளையான் அவர்களை அடையாளப்படுத்தினார்.

அங்கு கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர், கருத்த உருவத்தைக் கொண்ட தாடியுடனான நபரை அழைத்து வந்தார். அவரே சைனி மௌவியாவார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் இந்த நபர்களே தொடர்புபட்டிருந்தனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலைத் தாக்குதலின் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் இதனை மேற்கொண்டவர்கள் தாம் சிறையில் சந்தித்தவர்கள் என்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன் போது பிள்ளையானை தொடர்பு கொண்ட போது “வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரு” என பிள்ளையான் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...