tamilni 60 scaled
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்:நட்ட ஈடு கோரும் அரச புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி

Share

ஈஸ்டர் தாக்குதல்:நட்ட ஈடு கோரும் அரச புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி

சூம் தொழில்நுட்பம் ஊடாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது அருட்தந்தை சிறில் காமினி அடிகளார் முன்வைத்த கூற்று தமக்கு மட்டுமன்றி தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அரச புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியான சுரேஷ் சலே கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சாட்சியமளித்துள்ளார்.

நற்பெயருக்கும் மற்றும் உத்தியோகபூர்வ கடமைக்கும் பெரும் பாதிப்பாக அமைவதுடன் தமது பிள்ளைகளை பாடசாலைகளிலிருந்து நிறுத்துவதற்கும் நேரலாம் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு பிரிவு பிரதானியான சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவில் பிரதிவாதியாக சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தினருக்கு தெளிவுபடுத்தும் வகையில் சர்வதேச உண்மைக்கான பேரவை மூலம் 2021 அக்டோபர் 23ஆம் திகதி சூம் தொழில்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட கூட்டத்தில் தம்மைப் பற்றி தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அதனால் தமக்கு ஏற்பட்ட அப கீர்த்திக்காக சிறில் காமினி அடிகளாரிடம் 30 மில்லியன் ரூபா நட்ட ஈடாக பெற்றுத் தருமாறும் அவர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 1
இலங்கைசெய்திகள்

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை: வெள்ளப் பகுதிகளின் கண் தொற்றுகள் பரவும் அபாயம் – மக்கள் அவதானம்!

வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் (Eye Infections) எளிதில் பரவக்கூடும்...

25 69329d0e7c401
இலங்கைசெய்திகள்

பலத்த மின்னல் எச்சரிக்கை: மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அபாயம்! பொதுமக்கள் பாதுகாப்பாய் இருக்க அறிவுறுத்தல்

பலத்த மின்னலுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பை அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre –...

25 69340bc828c36
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் அதிர்ச்சி: 38 நோயாளிகளிடம் அத்துமீறிய மருத்துவர் மீது 45 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு!

பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றிவந்த ஒருவர், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் உட்பட 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக...

25 69341a3e0ac8b
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி கோமா நிலை: தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது கீழே விழுந்தாரா? முரண்பட்ட தகவல்கள்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கும் மேலாகக் கோமா...