சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்
உலகம்செய்திகள்

 ‘செல்லம்’னு சொன்னது நான்தான்.. என் பிட்டு தான் கில்லியில் பிரகாஷ்ராஜ் பேசினார்

Share

 ‘செல்லம்’னு சொன்னது நான்தான்.. என் பிட்டு தான் கில்லியில் பிரகாஷ்ராஜ் பேசினார்

கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் பேசிய ‘செல்லம்’ என்ற வசனத்தை முதன் முதலில் தாம் பயன்படுத்தியதாகவும், அது பரவி தான் கில்லியில் வந்துள்ளது என்றும் நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.

தமிழக மாவட்டம் கோவையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான்,”நான் இரவில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ‘சொல்லு செல்லக்குட்டி’ என பேசினேன். என் மாமியார் வெளியில் தரையில் படுத்திருந்தார். அதை அவர் கேட்டுக்கொண்டே இருந்தார்.

பின், என் மாமியார் என் மனைவியிடம் இதை பற்றி கூறினார். அதற்கு என் மனைவி, அண்ணன் வடிவேலு கூட பேசியிருப்பார் எனக் கூறியுள்ளார். அதற்கு என் மாமியார், அப்படியா இருவரும் பேசுவார்கள் எனக் கேட்டுள்ளார்” என்றார்.

மேலும் பேசிய சீமான், “முதன் முதலில் ‘செல்லம்’ என்ற வார்த்தையை சினிமாவில் நான் தான் பயன்படுத்தினேன். பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வடிவேலுவை இயக்கும் போது, ‘செல்லம் இங்க வா போ’ என்று தான் பேசுவோம். அது, இப்போது பரவிவிட்டது.

அப்படி தான் கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் பேசும்போது வைத்து விட்டார்கள். அது நான் போட்ட பிட்டு தான். ‘செல்லம்ம்’ -ன்னு பிரகாஷ் ராஜ் பேசுவாரே, அது தான்” எனக் கூறினார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...