rtjy 34 scaled
இலங்கைசெய்திகள்

ஏற்றுமதி வர்த்தகத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் வருமானம்

Share

ஏற்றுமதி வர்த்தகத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் வருமானம்

கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் ஏற்றுமதி வர்த்தகத்தினூடாக 86,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இலவங்கப்பட்டை, மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றின் ஏற்றுமதி மூலம் இந்தத் தொகை ஈட்டப்பட்டதாக அதன் அபிவிருத்திப் பணிப்பாளர் உபுல் ரணவீர குறிப்பிடுகின்றார்.

மேலும் அவர் தெரிவிக்ககையில்,

‘‘கடந்த 5 வருடங்களைக் கருத்தில் கொண்டு, 2023ஆம் ஆண்டுடன் தொடர்புடைய பயிர்களின் ஏற்றுமதி மூலம் அதிக அந்நியச் செலாவணியை ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் ஈட்டியுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஜூன் 2023 வரை 34,771 மெட்ரிக் தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு, 86,680 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டமுடிந்தது.

மேலும், இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் மிளகு போன்ற பயிர்கள் பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், பேரீச்சம்பழம் ஏற்றுமதியின் மூலம் பெருமளவிலான அந்நியச் செலாவணியும் கிடைத்துள்ளது.” என உபுல் ரணவீர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...