சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்
உலகம்செய்திகள்

திருமண புகைப்படம் வெளியிட தயாரா? சீமான் கேள்வி

Share

திருமண புகைப்படம் வெளியிட தயாரா? சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த நிலையில், திருமண புகைப்படம் வெளியிட தயாரா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்
சமீபத்தில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அப்போது அவர், “சீமான் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார். அவர், என்னை பயன்படுத்திக் கொண்டார் கடைசியில் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்” என்றார்.

மேலும், “சீமான் அரசியலில் ஒரு நிலை வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறிய நிலையில், நான் ஏழு முறை கருவுற்றேன். ஆனால், என்னை கட்டாய நிர்பந்தப்படுத்தி கருச்சிதைவு மாத்திரை கொடுத்தார்” எனவும் கூறினார்.

இந்த புகாரில், நடிகை விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் பொலிசார் விசாரணை செய்தனர்.

திருமண புகைப்படம் வெளியிடுங்கள்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “நடிகை விஜயலட்சுமி என்னுடன் ஒரு படம் நடித்தார். ஆனால், வீர லட்சுமிக்கு இதில் என்ன தொடர்பு இருக்கிறது.

நான் காதலித்தேன் என்றும், அவரை திருமணம் செய்தேன் என்றும் நடிகை விஜயலட்சுமி சொல்கிறார். அதற்கு, அவர் திருமண புகைப்படங்களை வெளியிட தயாரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “இந்த விவகாரத்தில் உண்மை இல்லை. இதை போல விஜயலட்சுமி 10 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...