7 15 scaled
உலகம்செய்திகள்

ஆசிரியருக்கு 7,000 ராக்கி கயிறுகள் கட்டிய மாணவிகள்

Share

ஆசிரியருக்கு 7,000 ராக்கி கயிறுகள் கட்டிய மாணவிகள்

இந்திய மாநிலம், பீகாரில் ரக்ஷா பந்தன் விழாவையொட்டி ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து 7 ஆயிரம் ராக்கி கயிறுகள் கட்டியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கான உறவை பலப்படுத்தும் பண்டிகையான ரக்ஷா பந்தன். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முழு நிலவு அன்று இந்த பண்டிகை கொண்டாடப்படும்.

இந்த பண்டிகையில் சகோதரிகள் தங்களது சகோதரர் கையில் ராக்கி என்னும் புனித கயிறு ஒன்றை கட்டுவார்கள். தீயவற்றில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் இந்த கயிறு கட்டுவது வழக்கமாக உள்ளது.

பீகார் மாநிலம், பாட்னாவில் கான் என்ற ஆசிரியர் ஒன்லைன் மூலமாகவும், டியூசன் மூலமாகவும் பாடம் எடுத்து வருகிறார். இவர், முழு அர்ப்பணிப்புடன் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவர், ரக்ஷா பந்தனையொட்டி ராக்கி கயிறு கட்ட மாணவிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால் ஆயிரக்கணக்கான மாணவிகள், சிறுமிகள் மற்றும் பெண்கள் திரண்டு கான் கையில் ராக்கி கயிற்றை கட்டினர்.

இது குறித்து கான் கூறுகையில்,”சுமார் 7 ஆயிரம் பெண்கள் தனது மணிக்கட்டில் ராக்கி கட்டியதாகவும், இது உலக சாதனை என்றும்” தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...