3 15 scaled
உலகம்செய்திகள்

அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் பயங்கர தீ: குழந்தை உட்பட 73 பேர் வரை பலி

Share

அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் பயங்கர தீ: குழந்தை உட்பட 73 பேர் வரை பலி

தென்னாப்பிரிக்காவில், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பற்றிய தீயில், குழந்தை உட்பட 73 பேர் வரை உயிரிழந்துள்ள விடயம் பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோஹன்னஸ்பர்கில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்றில் தீப்பற்றியுள்ளது. தரைத்தளத்தில் தீப்பற்றி ஆக்ரோஷமாக எரியத் துவங்கியதால் ஏராளமானோர் அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கியுள்ளார்கள்.

தீயணைப்பு வீரர்கள் ஒரு பக்கம் வேகவேகமாக மக்களைக் காப்பாற்றும் பணியிலும், மறுபக்கம் தீயை அணைக்கும் பணியிலும் இறங்கியுள்ளார்கள்.

அந்தக் கட்டிடத்தில் புலம்பெயர்ந்தோர் பலர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் நிலையில், ஏழு சிறுவர்கள், அவர்களில் ஒரு வயது குழந்தை ஒன்று உட்பட, 73 பேர் வரை பலியாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களில் சிலர், தீயிலிருந்து தப்ப ஜன்னல்கள் வழியாக குதித்ததில் உயிரிழந்துள்ளார்கள்.

மேலும், தீயில் 52 பேர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களும், புகையால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

அந்த கட்டிடத்தில் சுமார் 200 பேர் வரை இருந்ததாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளார்கள். இந்த கோர சம்பவம் தென்னாப்பிரிக்காவில் பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...