tamilni 424 scaled
இலங்கைசெய்திகள்

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்திற்கு சிக்கல்

Share

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்திற்கு சிக்கல்

உள்ளூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வது பெரும் பிரச்சினையாக மாறி வருவதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் (SLATCA) தெரிவித்துள்ளது.

உள்ளூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அண்மைக்காலமாக நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராஜித செனவிரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு சர்வதேச ஆட்சேர்ப்பு நிறுவனம் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் 20 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை பணியமர்த்துவதற்கான நேர்காணல்களை மேற்கொள்கிறது.

ஒரு பெரிய அளவிலான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஒரே நேரத்தில் வெளியேறினால் சிக்கல் இருக்கும்,”

“நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து குடியேற்றத்தைத் தடுக்க ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இந்த திட்டம் வெற்றியடைந்தால் பெரிய பிரச்சினை இருக்காது“ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...