tamilni 421 scaled
உலகம்செய்திகள்

ஐரோப்பா முழுவதும் 2,000 விமானங்கள் ரத்து

Share

ஐரோப்பா முழுவதும் 2,000 விமானங்கள் ரத்து

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் குழப்பத்தால் ஐரோப்பா முழுவதும் சுமார் 2,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இழப்பீடு சீர்திருத்தத்தை விமான நிறுவனங்கள் கோரியுள்ளன.

கடந்த மூன்று நாட்களில் 2,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒரு மணி நேர வான் கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து, விமான அட்டவணைகள் குழப்பமடைந்ததால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்துள்ளனர்.

உணவு, தங்குமிடம் மற்றும் மாற்றுப் பயணத்திற்கான செலவுகளை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறுவதால், விமான நிறுவனங்களுக்கு 100 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தொழில்துறை அமைப்பான Iata கணித்துள்ளது.

இருப்பினும் இது மிகவும் நியாயமற்றது எனவும், இந்த கோளாறு ஏற்பட்டமையால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு சிறிதளவு நிதியை கூட கொடுக்கவில்லை” என்றும் Iata அமைப்பின் இயக்குனர் ஜெனரல் வில்லி வால்ஷ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களுக்கு பொறுப்பானவர்கள் பயணிகள் இழப்பீடு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை இங்கிலாந்து பார்க்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மோசமான விமானத் தரவுகளால் ஏற்பட்ட தடுமாற்றம் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், எதிர்காலத்தில் இந்த தவறு ஏற்படாது என்றும் இங்கிலாந்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு உயர் அதிகாரி மார்ட்டின் ரோல்ஃப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...