rtjy 288 scaled
இந்தியாசெய்திகள்

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரபல நடிகை வரலக்ஷ்மி

Share

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரபல நடிகை வரலக்ஷ்மி

நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கம் என்பவர் கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

குறித்த குற்றச்செயல் தொடர்பில் இலங்கையை சேர்ந்த 6 பேர் முதலில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போதைப் பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியான குணசேகரன் என்பவரும் வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கமும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை ஆதிலிங்கம் திரைதுறையில் முதலீடு செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் ஆதிலிங்கம் குறித்து விசாரிக்க நடிகை வரலட்சுமி விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி இந்த செய்தி தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

‘சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்க நினைக்கிறேன். ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் எனக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியதாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை” என தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வழக்கில் இது வரையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...