4 17 scaled
உலகம்செய்திகள்

நைஜர் ராணுவ அரசுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் பதில்

Share

நைஜர் ராணுவ அரசுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் பதில்

நைஜர் நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் அழுத்தம் கொடுத்தாலும் பிரான்ஸ் தூதர் அங்குதான் தங்கியிருப்பார் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான்.

நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம், கடந்த வெள்ளிக்கிழமையன்று, நைஜர் நாட்டுக்கான பிரான்ஸ் தூதர் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

பிரான்ஸ் தூதரான Sylvain Itté, நைஜரின் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பிற்கான அழைப்பிற்கு பதிலளிக்க மறுத்ததால், அவரை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டதாக ராணுவ அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மேலும், பிரான்ஸ் அரசின் நடவடிக்கைகள், நைஜர் நாட்டின் கொள்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியிருந்தது.

நைஜர் ராணுவம், ஜூலை மாதம் 26ஆம் திகதி, நாட்டின் ஜனாதிபதி Mohamed Bazoumஇன் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கூடியிருந்த பல்வேறு நாடுகளின் தூதர்களிடையே உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை விட்டு வெளியேற 48 மணிநேர காலக்கெடு வழங்கப்பட்ட போதிலும், நைஜருக்கானா பிரான்ஸ் தூதரான Sylvain Itte நைஜர் தலைநகரில்தான் இருப்பதாக தெரிவித்தார்.

பிரான்சும் அதன் தூதர்களும் சமீபத்திய மாதங்களில், சில நாடுகளில், குறிப்பாக சூடான் முதல் நைஜர் வரை, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளனர் என்று கூறிய மேக்ரான், இந்த தருணத்தில் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

எங்கள் கொள்கை சரியானது என்று நான் நினைக்கிறேன் என்று கூறிய மேக்ரான். அது நைஜர் ஜனாதிபதி Bazoumஇன் தைரியத்தின் அடிப்படையிலும், சட்டத்திற்குப் புறம்பான அதிகாரிகளின் அனைத்து அறிவிப்புகளையும் மீறி, அனைத்து அழுத்தங்களையும் மீறி, நைஜரிலேயே தங்கியிருக்கும் எங்கள் தூதரின் உறுதியின் அடிப்படையிலுமானது என்று கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...