rtjy 277 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் உணவகம் ஒன்றிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

கொழும்பில் உணவகம் ஒன்றிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுகளை புறக்கணித்து, நீண்டகாலமாக பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்து வந்த உணவகமொன்றை மூடுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு 12, மார்டிஸ் லேனில் உள்ள உணவகம் ஒன்றையே இவ்வாறு மூடுமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 15ஆம் திகதி கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அந்த உணவகத்திற்கு எதிராக 10 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்த உணவகத்திற்கு குற்றச்சாட்டை திருத்துவதற்காக ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தவறுகளை திருத்திக்கொள்ளாத காரணத்தினால் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீண்டும் நீதிமன்றில் அந்த உணவகம் குறித்த உண்மைகளை அறிக்கை செய்துள்ளனர்.

இந்நிலையிலே மாளிகாகந்த நீதிமன்ற நீதவான் லோச்சனா அபேவிக்ரம, 25,000 ரூபா அபராதம் விதித்து குறித்த உணவகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...