rtjy 256 scaled
உலகம்செய்திகள்

ரஷ்யாவை பழிதீர்க்க களமிறங்கியுள்ள கூலிப்படை வீரர்கள்

Share

ரஷ்யாவை பழிதீர்க்க களமிறங்கியுள்ள கூலிப்படை வீரர்கள்

வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணத்திற்கு பழி வாங்க வாக்னர் படை வீரர்களுக்கு கமெண்டர் டெனிஸ் கபுஸ்டின் அழைப்பு விடுத்துள்ளார்.

வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் உட்பட விமானத்தில் பயணம் செய்த 10 பேர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்ய படைத்தளபதிகள் எதிர்த்து மாஸ்கோ நோக்கி அணிவகுத்து சென்றதற்காகவே அவரை திட்டமிட்டு ரஷ்யா கொன்று விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதேவேளை, விமான விபத்து ஏற்பட்ட 24 மணி நேரம் கழித்து வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் குடும்பத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக சண்டையிட்டு வந்த ரஷ்ய கூலிப்படை வீரர்கள், தங்கள் தலைவர் எவ்ஜெனி பிரிகொஜினினின் உயிரிழப்பிற்கு பழிவாங்கும் விதமாக அணிமாறி ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட தயாராகி வருகின்றனர் என கூறப்படுகின்றது.

மேலும் பழிவாங்க வேண்டும் என்றால் நீங்கள் உக்ரைன் பக்கம் அணி மாற வேண்டும் என்றும், மாஸ்கோ நோக்கிய புதிய அணிவகுப்பிற்கு தங்களுடன் வாகனர் வீரர்கள் இணைந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...