rtjy 252 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

Share

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

பிரமிட் திட்டங்களால் அவற்றின் சட்டபூர்வத்தன்மையை நிரூபிக்கும் நோக்கில் வெளியிடப்படும் கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இணையவழித்தளங்கள் ஊடாக செயற்படும் சில பிரமிட் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யுமாறு பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதாக தமக்குப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

‘‘இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இத்திட்டம் முதலீட்டாளர்களின் நிதியங்களைப் பாதுகாக்கின்றது. இத்திட்டம் உரிய வரிகளை அரசுக்குச் செலுத்துகின்றது, நிதியங்களை மீளப்பெறும் பொருட்டு இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் தமது நிதியங்களிலிருந்து தனிப்பட்ட வருமான வரியை இலங்கை மத்திய வங்கிக்குச் செலுத்தவேண்டும். அன்றேல் அவர்களது நிதியங்கள் மத்திய வங்கியினால் முடக்கப்படும், இத்திட்டம் இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது’ என்பன போன்ற விடயங்களே தமது திட்டத்தை நியாயப்படுத்துவதற்காக சில பிரமிட் திட்ட ஏற்பாட்டாளர்களால் கூறப்படுவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.’’

இவ்வாறான கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், இக்கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எனவே இத்தகைய திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும், விழிப்புடனும் செயற்படுமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மேலும் இத்திட்டங்களில் முதலீடு செய்வதனூடாக பொதுமக்கள் பணத்தை இழக்கக்கூடும் என்பதனால், இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் அளிக்கப்பட்டு, ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களின் விபரங்களை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திலும், வெளிநாட்டுச்செலாவணித் திணைக்களத்தின் வலைத்தளத்திலும் பார்வையிட முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...