rtjy 232 scaled
இலங்கைசெய்திகள்

தமிழர்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் பிள்ளையானிடம் கூறிய விடயம்

Share

தமிழர்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் பிள்ளையானிடம் கூறிய விடயம்

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதாக சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பு 25.08.2023 இடம்பெற்றதாக அவருடைய முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில், திட்டமிட்ட சில கும்பல்களினால் தோற்றுவிக்கப்படும் சில அத்துமீறல்கள், குற்றச் செயல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்த மடு,மாதவனை போன்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற அத்துமீறல்கள் அதனுடன் தொடர்புபட்ட பிணக்குகள் போன்றவற்றினை சரி செய்யும் முகமாக குறித்த பிரதேசத்தில் நிரந்தரமான பொலிஸ் சோதனைச் சாவடியினை மிக விரைவில் அமைப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதனுடன் இணைந்ததாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம்பெறக்கூடிய சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனை போதைப்பொருள் கடத்தல் அவற்றுடன் தொடர்புபட்ட குற்றச்செயல்கள் போன்றவற்றை தடுப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர், தமிழர்கள் பொலிஸ் சேவையில் இணைவது குறைவாக இருப்பதாகவும் அவர்கள் தங்களது சமூகத்திற்கு சேவையாற்றும் வண்ணமாக பொலிஸ் சேவையில் இணைந்து பணியாற்ற வேண்டுமெனவும் அதனை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் எம்மிடம் வலியுறுத்தியிருந்தார் என பிள்ளையான் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...