tamilni 303 scaled
இலங்கைசெய்திகள்

விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள விதிகள்…!

Share

விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள விதிகள்…!

நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பில் நிதியியல் சேவை வழங்குனர்களால் பின்பற்றப்பட வேண்டிய புதிய ஒழுங்கு விதிகள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 மாதகாலத்துக்குள் இந்த புதிய ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு ஒழுங்கு விதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 9 ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற அனைத்து நிதியியல் சேவை வழங்குனர்களுக்கும் இவ்வொழுங்குவிதிகள் ஏற்புடையதாக இருக்கும்.

இதனூடாக வங்கித்தொழில் சட்டம், நிதித்தொழில் சட்டம் மற்றும் நிதிக்குத்தகைக்கு விடுதல் சட்டம் என்பவற்றின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஒழுங்கு விதிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக வகுக்கப்பட்டுள்ளன.

ஒழுங்குபடுத்தப்படும் நிதியியல் நிறுவனங்களின் நிதியியல் உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கையாளும் தனிநபர்களும் வியாபாரங்களும் மேம்படுத்தப்பட்ட வகையில் நியாயமாகவும், வெளிப்படையான விதத்திலும் நடாத்தப்படுவதுடன் அவர்களது நிதிசார் செயற்பாடுகள் தொடர்பில் மீயுயர் நம்பிக்கையுடன் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இயலச்செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கூறுகளை இவ்வொழுங்குவிதிகள் உள்ளடக்கியுள்ளன.

அதுமாத்திரமன்றி டிஜிட்டல் நிதிச்சேவைகள், வாடிக்கையாளர் தரவுப்பாதுகாப்பு மற்றும் விசேட தேவையுடைய வாடிக்கையாளர்களின் நிதியியல் தேவைப்பாடுகள் என்பன தொடர்பான நவீன நடவடிக்கைகளும் இவ்வொழுங்கு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் மத்திய வங்கியின் பிணக்குத்தீர்த்தல் பொறிமுறைக்கு மாற்றீடாக, குறைநிரப்புச்செய்யப்பட்ட உள்ளக முறைப்பாட்டுக்கையாள்கை பொறிமுறையையும் இந்த ஒழுங்குவிதிகள் பிரேரிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...