tamilni 296 scaled
இலங்கைசெய்திகள்

நபர் கொடூர செயல் – துண்டுகளாக வெட்டப்பட்ட உடற்பகுதிகள்

Share

நபர் கொடூர செயல் – துண்டுகளாக வெட்டப்பட்ட உடற்பகுதிகள்

அதுருகிரிய, சீலாலங்கார மாவத்தை பகுதியில் நபர் ஒருவரின் கை கால்களை வாளால் தனித்தனியாக வெட்டி எடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற சந்தேகநபர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துருகிரிய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாரத பெர்னாண்டோவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹபரகட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வாள் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

டுபாயில் வாழும் ஹபரகட கசுன் என்ற போதைப்பொருள் வியாபாரியின் நண்பரின் மனைவியுடன் பாதிக்கப்பட்ட நபர் தொடர்பு வைத்திருந்ததால், அதற்கு பழிவாங்கும் விதமாக ஹபரகட கசுன் கொடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதற்காக ஒரு கிராம் போதைப்பொருள் ஐஸ் மற்றும் நாற்பதாயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ஹோமாகம முல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் சந்தேக நபர் கூலி வேலையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...