tamilni 287 scaled
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி! பிரச்சினைகளை தீர்க்க உடனடி தலையீடு

Share

வாகன இறக்குமதி! பிரச்சினைகளை தீர்க்க உடனடி தலையீடு

கடனுதவிக்கான சர்வதேச அங்கீகாரம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை தயாராக உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும் விசேட தேவைகளுக்கு தேவையான லொறிகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியின் அடிப்படையில் கடன் பத்திரங்களில் (LCs) எழும் பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக தலையிடுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது, ​​இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் கடன் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் உட்பட பல வகை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை இறக்குமதி செய்வது சிக்கலாக மாறியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மத்திய வங்கி உள்ளிட்ட குழுக்களுடன் கலந்துரையாடி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடன் பத்திரங்களுக்கு அரசாங்க உத்தரவாதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சு ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...