ராஜபக்சக்களை திருடர்களாக காண்பிக்க முயற்சி!
இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களை திருடர்களாக காண்பிக்க முயற்சி!

Share

ராஜபக்சக்களை திருடர்களாக காண்பிக்க முயற்சி!

நாட்டை அபிவிருத்தி செய்த தலைவர்களை சில தரப்புக்கள் திருடர்களாக காண்பிக்க முயற்சிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை அழித்த தரப்புக்கள் எவ்வித அடிப்படையுமின்றி தமது கட்சியின் தலைவர்களை திருடர்கள் என சித்தரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவிகளை வகித்த காலத்தில் எதனையும் நாட்டுக்காக செய்யாதவர்கள் இன்று தமது கட்சித் தலைவர்களை குற்றம்சுமத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணித் தலைவர்களை திருடர்கள் என விமர்சனம் செய்யும் நபர்களே இந்த நாட்டை அழித்தவர்கள் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...