rtjy 206 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியாவிற்கு தப்பிச்சென்ற பாதாள உலகக்குழுவின் தலைவர்!

Share

இந்தியாவிற்கு தப்பிச்சென்ற பாதாள உலகக்குழுவின் தலைவர்!

பாதாள உலகக்குழுவின் பலம் வாய்ந்த தலைவராக கருதப்படும் கணேமுல்ல சஞ்சீவ மற்றும் கோத்தா அசங்க ஆகியோர் பாதுகாப்புப்படையினரால் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இருவரையும் கைது செய்ய பொலிஸ் குழுக்கள் முற்பட்டபோது, ​​அவர்கள் 2018 ஆம் ஆண்டு படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருந்தனர்.

இந்தியாவிற்கு தப்பிச்சென்ற கணேமுல்ல சஞ்சீவ தனது சகா கோட்டா அசங்கவுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் மற்றும் கொலைகளை மேற்கொள்வதற்கு அவர்களின் ஆதரவாளர்களை வழிநடத்தியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்திய பாதுகாப்புப்படையினர் இருவரையும் கைது செய்தததாக இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்று உளவுத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மேலும், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...