போர் விமானங்களை கொத்தாக அனுப்பி தைவானை மீண்டும் சீண்டிய சீனா
உலகம்செய்திகள்

போர் விமானங்களை கொத்தாக அனுப்பி தைவானை மீண்டும் சீண்டிய சீனா

Share

போர் விமானங்களை கொத்தாக அனுப்பி தைவானை மீண்டும் சீண்டிய சீனா

தைவான் எல்லை அருகாமையில் சீனா பயிற்சி முன்னெடுத்துள்ள நிலையில், சனிக்கிழமை மட்டும் 40கும் மேற்பட்ட போர் விமானங்கள் எல்லையை மீறியதாக தைவான் கொந்தளித்துள்ளது.

தேர்தலில் ஆதிக்கத்தை செலுத்தவே
தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கையில், தைவான் ஜலசந்தியை சீனாவின் 26 விமானங்கள் கடந்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். தைவானில் முன்னெடுக்கப்பட இருக்கும் தேர்தலில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தவே சீனா முயன்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஆனால், சீனா தரப்பில், போர் சூழலில் படைகளின் திறன் குறித்து சோதனை மேற்கொள்ளவே இந்த பயிற்சி என குறிப்பிட்டுள்ளனர். சனிக்கிழமை தைவான் எல்லையில் கடற்படை மற்றும் விமானப்படையின் ரோந்து மற்றும் பயிற்சிகளை சீனா முன்னெடுத்தது.

மேலும், கடும் எதிர்ப்பையும் மீறி தைவானின் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் அமெரிக்கா சென்றதும் சீனாவை கோபம் கொள்ள வைத்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு விஜயம் செய்ததையடுத்து, சீனா இதுபோன்று பெரிய ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது.

பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக
திரும்பவும், கலிபோர்னியாவில் தைவான் ஜனாதிபதி தற்போதைய சபாநாயகரை சந்தித்த பின்னரும் சீனா தனது கோபத்தை வெளிப்படுத்தியது. ஜனவரியில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வில்லியம் லாய் முதன்மை வேட்பாளராக பார்க்கப்படுகிறார்.

ஆனால் சீனா தெரிவிக்கையில், வில்லியம் லாய் எப்போதும் பிரச்சனையை கிளப்புபவர். அவரது தலைமையில் நாட்டின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறும் என குறிப்பிட்டுள்ளது.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...