உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! விஷம் காரணமா?
உலகம்செய்திகள்

உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! விஷம் காரணமா?

Share

உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! விஷம் காரணமா?

உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாமா என்பது குறித்து ஜேர்மன் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைக் கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த ரஷ்ய ஊடகவியலாளர் Elena Kostyuchenko.

Elena உக்ரைனிலுள்ள மரியூபோல் நகரிலிருந்து செய்தி சேகரித்துவந்த நிலையில், ரஷ்யர்கள் அவரைக் கொலை செய்யமுயற்சி செய்வதாக உக்ரைன் ராணுவ தரப்பிலிருந்து துப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்குத் தப்பிவந்தார் அவர்.

மீண்டும் செய்தி சேகரிப்பதற்காக உக்ரைன் செல்வதற்காக, விசாவுக்காக ஜேர்மனியின் Munich நகருக்குப் பயணித்த Elena, ரயிலில் மீண்டும் பெர்லினுக்குத் திரும்பும்போது, திடீரென அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங்கியுள்ளன.

கடும் தலைவலி, தளர்ச்சி, மூச்சுத்திணறல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது Elenaவுக்கு. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Elenaவுக்கு கல்லீரல் என்சைம்கள் திடீரென ஐந்து மடங்கு அதிகரித்திருந்தது தெரியவந்தது. அத்துடன், அவரது சிறுநீரில் இரத்தமும் வெளியேறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஜேர்மன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். இடையில் அந்த விசாரணை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது அந்த விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...