63 உயிர்களை பலி வாங்கிய படகு விபத்து! 
உலகம்செய்திகள்

63 உயிர்களை பலி வாங்கிய படகு விபத்து! 

Share

63 உயிர்களை பலி வாங்கிய படகு விபத்து!

ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி பயணித்த படகு விபத்திற்குள்ளானதில் 63 பேர் பலியாகியுள்ளனர்.

செனகல் நாட்டைச் சேர்ந்த 63 பேர் படகு ஒன்றில் பயணித்துள்ளனர். இந்த படகு மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் இருந்து ஸ்பானிஷின் கேனரி தீவுகள் நோக்கி சென்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த படகு கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்துள்ளது.

இதில் படகில் பயணித்த அனைவரும் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மூழ்கியவர்களில் 56 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 7 பேரின் உடல்களை தேடி வருவதாக ஐ.நாவின் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பு உபகரணம் இல்லாததால் இந்த உயிர்சேதம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் புலம்பெயர்வுக்காக செனகல் மக்கள் கேனரி தீவுக்கு பயணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...