தமிழர் பகுதியில் இராணுவம் முக்கிய தீர்மானம்
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இராணுவம் முக்கிய தீர்மானம்

Share

தமிழர் பகுதியில் இராணுவம் முக்கிய தீர்மானம்

ஜனாதிபதியின் அழுத்தத்தை தொடர்ந்து எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் வடக்கில் 377 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் நேற்று (16.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,“தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தான் வடக்கில் இராணுவத்தினர் வசம் குறைந்தபட்ச அளவிலான காணிகள் காணப்படுகின்றன. பிரிவினைவாதம் வடக்கு மாகாணத்தில் தோற்றம் பெற்றதால் ஏனைய மாகாணங்களை காட்டிலும் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்க வேண்டும்.

ஜனாதிபதியின் அழுத்தத்தை தொடர்ந்து எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் 377 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவும், மகிழ்விப்பதற்காகவும் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவத்துக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 09 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்து விசேட கவனம் செலுத்தியிருந்தார்.

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 26,812 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் 22,919 ஏக்கர் நிலப்பரப்பு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 85 சதவீதமானரை இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை தமிழ் அரசியல்வாதிகளுக்கு காணப்படுகிறதே தவிர அப்பிரதேசங்களில் வாழும் தமிழர்களுக்கல்ல, பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாமை அகற்ற அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக அப்பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

‘இராணுவ முகாமை அகற்றினால் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும்,இப்பகுதி போதைப்பொருள் வியாபாரிகள்,சட்டவிரோத செயற்பாட்டாளர்களின் கொலனியாகும்’ஆகவே முகாமை அகற்ற வேண்டாம் என வலியுறுத்தி தமிழ் மக்கள் இராணுவ தலைமையகத்துக்கு மனுக்களை சமர்ப்பித்துள்ளார்கள்.”என கூறியுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...