குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்
இலங்கைசெய்திகள்

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்

Share

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 54 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL230 விமானம் மூலம் 53 பெண்களும் ஒரு ஆணும் நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர்.

செல்லுபடியாகும் வீசா காலத்தை தாண்டி குவைத்தில் தங்கியிருப்பது, பணியிடத்தை விட்டு ஓடி, வேறு இடங்களில் பணிபுரிவது போன்ற காரணங்களால் இவர்கள் நாட்டிற்கு வர முடியாமல் தவித்தவர்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் தொழிலுக்காக சென்று நாட்டிற்கு வரமுடியாமல் பாதுகாப்பான வீடுகளில் தங்கியுள்ள தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த பணியகத்தின் தலைவர், தூதரகங்களின் தொழிலாளர் நலன் பிரிவு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, குவைத் தூதரகத்தில் பதிவு செய்து குடிவரவுத் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் உரிய தகவல்களை சமர்ப்பித்து ஒரு நாளில் இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...