கடைசி வரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர்!
இலங்கைசெய்திகள்

கடைசி வரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர்!

Share

கடைசி வரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அன்று நாங்கள் நேசித்தோம். எவ்வாறாயினும் அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிருப்தி அளித்தமையால் இயக்கத்தில் இருந்து விலகிக் கொண்டோம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடைசி வரை போராடி மரணித்துப் போனார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல அழிவுகளையும், இழப்புக்களையும் நாம் சந்தித்திருக்கின்றோம்.

உண்மையில் அடைய முடியாத இலக்குகளுக்காக அழிந்து போயிருக்கின்றோம். எனவே அடைந்தவற்றையாவது இனி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டுமே தவிர பழைய புகழையே பாடுவதால் எந்தப் பயனும் இல்லை.

கடந்த காலங்களில் வன்முறை கலாசாரம் விரும்பியோ விரும்பாமலோ எமது சமூகத்திற்குள் திணிக்கப்பட்டது. இறுதியில் அது இயலாமையில் முடிந்தது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் வன்முறைத் தலைவர்களைப் பற்றி சிந்திப்பது இனியும் பொருத்தமான விடயமே அல்ல. வன்முறைக்கான தேவைப்பாடு இனி மக்கள் மத்தியில் எழாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...