இலங்கையில் மின்சாரம் இன்றி தவிக்கப் போகும் மக்கள்
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மின்சாரம் இன்றி தவிக்கப் போகும் மக்கள்

Share

இலங்கையில் மின்சாரம் இன்றி தவிக்கப் போகும் மக்கள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் அதன் அதிகபட்ச கொள்ளளவை மின்சாரத்திற்கு பயன்படுத்தினால் அதன் உற்பத்தி திறன் 30 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் மட்ட உயரம் கடல் மட்டத்திலிருந்து 438 மீட்டர் ஆகும். ஆனால் நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதால், தற்போது நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 409.7 மீட்டர் உயரத்தில் உள்ளது.

அதிகபட்ச நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 380 மீட்டருக்கு மேல் இருந்தால் மட்டுமே நீர்த்தேக்கத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

அதிகபட்ச நீர் கொள்ளளவு இருந்தால், 06 முதல் 08 கிகாவாட் மணி நேரத்திற்குள் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்,

மேலும் 13 முதல் 14 மில்லியன் கன மீட்டர் வரை நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது.

அண்மைய நாட்களில் மின்சார உற்பத்திக்காக 01 கிகாவாட் மணித்தியாலத்திற்கும் குறைவான நீரே விடுவிக்கப்பட்டிருந்தது.

நுரோச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று பழுதடைந்தமையினால் ஏற்பட்ட பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக நேற்று முதல் நீர்த்தேக்கத்திலிருந்து 2.5 கிகாவாட் மணித்தியால மின்சார உற்பத்திக்காக 6.5 மில்லியன் கனமீற்றர் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...

24 66c584aba0b91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெல்லவாய – தனமல்வில விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வெல்லவாய – தனமல்வில வீதியில் உள்ள தெல்லுல்லப் பகுதியில் இன்று (டிசம்பர் 15) ஏற்பட்ட கோர...