கனடாவில் கல்வி கற்க காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம்
உலகம்செய்திகள்

கனடாவில் கல்வி கற்க காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம்

Share

கனடாவில் கல்வி கற்க காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம்

கனடாவில் கல்வி கற்பதற்கு தயாராக இருந்த இந்திய மாணவர்கள் சிலருக்கு கனடாவிலுள்ள கல்லூரி ஒன்று ஏமாற்றமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் கல்வி கற்பதற்காக தயாராகியிருந்த இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கனடாவின் Scarborough வில் உள்ள Northern College எனும் கல்லூரியில் பயில்வதற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்துள்ளனர்.

அடுத்த மாதத்தில் வகுப்புகள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், திடீரென அவர்களுடைய விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கல்லூரி நிர்வாகம் தகவல் அனுப்பியுள்ளது.

காத்திருந்த மாணவர்களில் பலர் விமான டிக்கெட்டுகளை வாங்கிவிட்டு, தங்குமிடத்துக்கும் பணம் செலுத்தியுள்ளனர்.

கனடாவிலுள்ள கல்லூரிகள் பல வருவாய்க்காக உள்ளூர் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன.

அத்துடன், விண்ணப்பிக்கும் எல்லா மாணவர்களுக்கும் விசா கிடைக்கப்போவதில்லை என கல்லூரி நிர்வாகம் அறிந்திருப்பதால் இது போன்ற கல்லூரிகள் கல்லூரியில் இருக்கும் இடங்களை விட அதிக விண்ணப்பப் படிவங்களை விநியோகிக்கின்றன.

இதனால் இருக்கைகளை மிஞ்சிய விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றமையால் அந்த மாணவர்களின் விண்ணப்பங்களை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுகின்றன.

எனினும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முழு கல்விக்கட்டணத்தையும் திருப்பித் தருவதாகவும், அல்லதுவேறு கல்லூரிகளிலிருந்து அனுமதி கடிதங்கள் பெற்றுத்தருவதாகவும், இந்தக் கல்லூரியில் மாணவர்கள் கட்டியுள்ள கல்விக் கட்டணத்தை அந்தக் கல்லூரிகளுக்கு செலுத்திவிடுவதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த விடயங்களில் எந்தளவிற்கு உண்மைத்தன்மை உள்ளது என்பது சந்தேகமே.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...