தக்காளியை பாதுகாக்க ரூ.22 ஆயிரம் செலவில் சிசிடிவி கேமரா
உலகம்செய்திகள்

தக்காளியை பாதுகாக்க ரூ.22 ஆயிரம் செலவில் சிசிடிவி கேமரா

Share

தக்காளியை பாதுகாக்க ரூ.22 ஆயிரம் செலவில் சிசிடிவி கேமரா

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் தக்காளியை பாதுகாக்க விவசாயி ஒருவர் ரூ.22 ஆயிரம் செலவு செய்து சிசிடிவி கேமரா வைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பாமர மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தக்காளியா, தங்கமா என்று கேட்கக் கூடிய அளவுக்கு வந்துவிட்டது என்றும் சிலர் கூறுகின்றனர். சில திருமணங்களில் பரிசாக தக்காளியை கொடுக்கும் பழக்கமும் வந்துள்ளது.

உத்திர பிரதேசத்தில் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், ஹோட்டல்களிலும் தக்காளி இல்லாமல் சமைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஷரத் ராவத்தே என்ற விவசாயி ஒருவர் தக்காளி பாதுகாப்பிற்காக தனது வயலில் கேமராக்கள் பொருத்துவதற்கு ரூ.22 ஆயிரம் செலவிட்டுள்ளார்.

இவர், நாடு முழுவதும் தக்காளியின் விலை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டும், திருட்டு அல்லது வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்களுக்கு பயந்து தனது வயலில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.

மேலும், அவர் காலத்தின் தேவைக்காகவும் சிசிடிவிகளை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு தோராயமாக 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளியின் விலை உயர்வால் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அந்தவகையில், கர்நாடகாவின் கோலாரில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளியைக் கொண்டு சென்ற லாரி காணாமல் போயுள்ளது.

மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காய்கறி சந்தையில் உள்ள கடைகளில் இருந்து சுமார் 40 கிலோ தக்காளியை திருடர்கள் திருடிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...