வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்
இலங்கைசெய்திகள்

வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

Share

வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

ஹக்மீமன, ஹியார் பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 47 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் நேற்று காலை வேயங்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் கடந்த 04ஆம் திகதி இரவு பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்து வன்புணர்வு செய்த பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகநபர் பெண்ணிடம் இருந்த நகைகள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.

அக்மீமன, ஹியாரே பகுதியிலுள்ள வீட்டில் 65 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் நேற்று இரவு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணின் மகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, இது தெரியவந்துள்ளது.

பின்னர் விசாரணையில் அவர் அணிந்திருந்த நகை மற்றும் காதணிகளை யாரோ எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அவரது முகத்திலும் காயம் இருந்ததை அவதானித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...