வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாடு!
உலகம்செய்திகள்

வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாடு!

Share

வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாடு!

ஸ்லோவேனியா வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் நகரங்களுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

அந்நாட்டின் பிரதமர் ராபர்ட் கோலோப், ஸ்லோவேனியாவை வரலாறு காணாத வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திவிட்டது என குறிப்பிட்டார்.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில், ‘பாரிய அளவிலான அழிவு மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நட்பு நாடான ஸ்லோவேனியாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடையவும், பேரழிவின் விளைவுகளை சமாளிக்கவும், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மீட்டெடுக்கவும் நான் விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...