குப்பை லொறியில் சிக்கி மகள் கண்முன்னே தாய் பலி
உலகம்செய்திகள்

குப்பை லொறியில் சிக்கி மகள் கண்முன்னே தாய் பலி

Share

குப்பை லொறியில் சிக்கி மகள் கண்முன்னே தாய் பலி

குப்பை லொறி சக்கரத்தில் சிக்கி மகளின் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் தமிழகத்தில் உள்ள சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரவி மற்றும் வரலட்சுமி (46). இவர்களுக்கு குணாளினி (20) என்ற மகள் உள்ளார்.

தாய் மற்றும் மகள் இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்கள். அதன்படி இருவரும், நேற்று வழக்கம்போல் மொபட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். மகள் குணாளினி மொபட்டை ஓட்டினார். பின்னால் வரலட்சுமி அமர்ந்து சென்றார்.

அப்போது, பூந்தமல்லி – மவுண்ட் சாலையில் காட்டுப்பாக்கம் அருகே சென்ற போது பின்னால் வந்து கொண்டிருந்த குப்பை லொறி மொபட்டின் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி தாய், மகள் இருவரும் கீழே விழுந்தனர்.

அப்போது, கீழே விழுந்த வரலட்சுமி மீது குப்பை லொறியின் சக்கரம் ஏறியது. அப்போது, உடல் நசுங்கி மகள் கண்முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில், மகள் குணாளினி லேசான காயத்துடன் உயிர் தப்பி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, குப்பை லொறி ஓட்டிவந்த டிரைவர் தப்பி ஓடினார். மேலும், இச்சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பை லொறி டிரைவரை தேடி வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...