நாடாளுமன்றத்தில் திருடிய நபர் கைது
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் திருடிய நபர் கைது

Share

நாடாளுமன்றத்தில் திருடிய நபர் கைது

நாடாளுமன்றத்தில் திருடிய குற்றச்சாட்டின் கீழ் அங்கு பணியாற்றும் சமையல்காரர் ஒருவர் நாடாளுமன்ற பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் நேற்று (04.08.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே ஜாம் போத்தல் மற்றும் ரின் பால் குவளை ஒன்றை திருடி எடுத்துச் செல்ல முற்பட்ட போதே குறித்த சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான சமையல்காரர் தனது பணியை முடித்து, ​​நாடாளுமன்ற பிரதான நுழைவாயிலில் சென்றபோது அவர் வைத்திருந்த பையை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது நாடாளுமன்றத்தின் சமையலறையில் இருந்து ஜாம் போத்தல் மற்றும் ரின் பால் குவளை என்பன திருடப்பட்டு எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்ற சமையலறையில் இருந்து உணவு பொருட்களை எடுத்துச் சென்ற பல ஊழியர்கள் நாடாளுமன்ற பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...