ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி
உலகம்செய்திகள்

ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி

Share

ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி

சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற ஆறு பேர் சில நாட்கள் இடைவெளியில் உயிரிழந்துள்ளார்கள்.

ஞாயிற்றுக்கிழமை, 47 வயது ஜேர்மானிய உக்ரைனியர் ஒருவர், சுவிட்சர்லாந்தின் இரண்டாவது உயரமான சிகரமான, 14,867 அடி உயரமுடைய Weisshornஇல் ஏறும் முயற்சியின்போது, 1900 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை, சுவிட்சர்லாந்தின் Bernஐச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் Stockhorn மலையிலிருந்து இறங்கும்போது, வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மேலும், 26 வயது பிரான்ஸ் நாட்டவர் ஒருவரும், 36 வயது நெதர்லாந்து நாட்டவர் ஒருவரும் 3,450 மீற்றர் உயரமுடைய Aiguille du Tour என்னும் மலையில் ஏறும்போது பனிப்பாறைச் சரிவில் சிக்கியுள்ளார்கள். அவர்கள் இருவரும் திங்கட்கிழமை உயிரிழந்துவிட்டதாகவும், காயமடைந்த 22 வயது நெதர்லாந்து நாட்டவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, சூரிச்சைச் சேர்ந்த 37 வயது ஆண் ஒருவரும், 33 வயது பெண் ஒருவரும் Lagginhorn என்னும் மலையில் 13,000 அடி உயரத்தை எட்டிய நிலையில், 200 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்கள்.

சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற ஆல்ப்ஸ் மலையில், சில நாட்களில் ஆறு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ள விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...