லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்
உலகம்செய்திகள்

லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்

Share

லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்

தமிழகத்தில் கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள சென்னை தரமணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரகு. இவருக்கு வயது 26. இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹேமலதா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஹேமலதா, கிண்டியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பிபிஏ 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை பெரம்பூரில் உள்ள தன்னுடை தாய் வீட்டிற்கு ஹேமலதா தனது கணவருடன் இருச்சக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது, அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே வரும் போது பின்னால் வந்து கொண்டிருந்த சிமெண்ட் கலவை லொறி இருச்சக்கரவாகனத்தின் மீது மோதியது.

இருச்சக்கரவாகனத்தின் மீது லொறி மோதியதில் ஹேமலதா கீழே விழுந்தார். அப்போது, ஹேமலதா தலையின் மீது லொறியின் சக்கரம் ஏறி இறங்கியதில் கணவர் கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதில், ரகு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இச்சம்பவத்தை அறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு பொலிசார் உயிரிழந்த ஹேமலதாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லொறி ஓட்டுநர் ஆசாத் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த தன் மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கணவர் அழுத நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...