கனடாவாழ் யாழ் குடும்பஸ்தரால் இரண்டுபட்ட லண்டன் தமிழ் குடும்பம்!
இலங்கைசெய்திகள்

கனடாவாழ் யாழ் குடும்பஸ்தரால் இரண்டுபட்ட லண்டன் தமிழ் குடும்பம்!

Share

கனடாவாழ் யாழ் குடும்பஸ்தரால் இரண்டுபட்ட லண்டன் தமிழ் குடும்பம்!

கனடாவிலிருந்து தனது பாடசாலை நண்பியை சந்திக்கச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 40 வயதான குடும்பஸ்தர் நண்பியின் கணவனால் நையப்புடைக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

யாழில் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பின் காரணமாகவே கனடாவில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர் லண்டனில் தனது நண்பியைச் சென்ற வாரம் சந்திக்க சென்றுள்ளார்.

லண்டன் வருவதற்கு முன்னரே கனடா குடும்பஸ்தர் தனது மனைவியுடன் தகாத முறையில் பேசுவதை கணவன் கண்காணித்து வந்திருந்தாலும் அதைப்பற்றி மனைவியிடம் கேட்காது மௌனமாக இருந்துள்ளார்.

இந் நிலையில் லண்டனுக்கு கனடா குடும்பஸ்தர் வரும் தகவலை அறிந்துகொண்டுளார். லண்டன் வந்த கனடா குடும்பஸ்தர் ஒரு நாள் விடுதியில் தங்கியிருந்த பின்னர் கணவன் இல்லாத நேரம் தனது பாடசாலை நண்பியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இரு பிள்ளைகளின் தாயான குறித்த நண்பி தனது பிள்ளைகள் மற்றும் கணவன் இல்லாத நேரத்தை வட்சப் மூலம் கனடா குடும்பஸ்தருக்கு தெரிவித்த பின்னரே கனடா குடும்பஸ்தர் நண்பியிடம் சென்றுள்ளார்.

கனடா நண்பன் வீட்டுக்குச் சென்றதை உறுதிப்படுத்திய நண்பியின் கணவன் அங்கு திடீரென புகுந்து கனடா குடும்பஸ்தர் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

கணவரின் தாக்குதலில் தலை மற்றும் முகம் ஆகியவற்றில் படுகாயங்களுக்குள்ளான கனடா குடும்பஸ்தரை பொலிசாரே மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவருகின்றது.

அதன் பின்னரே சம்பவம் தொடர்பில் பாடசாலை நண்பியின் கணவனை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

கைதாகிய கணவன் தனது மனைவியின் செயற்பாடு மற்றும் குறித்த கனடா குடும்பஸ்தரின் செயற்பாடு போன்றவற்றின் ஆதாரங்களை பொலிசாரிம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் கணவனின் திட்டமிட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கணவர் சிறைக்கு செல்ல நேரிடலாம் எனவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...